Connect with us

சினிமா செய்திகள்

வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து: எந்த வழக்கை தெரியுமா?

Published

on

கவிஞர் வைரமுத்து தான் பதிவு செய்த வழக்கு ஒன்றை வாபஸ் பெற்று உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது

கவிஞர் வைரமுத்து நாளிதழ் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆண்டாள் குறித்து தவறாக கூறியதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது, இந்து மக்கள் கட்சி உட்பட பல கட்சிகள் வைரமுத்துவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜரும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும் வைரமுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது

இந்த நிலையில் வைரமுத்து தனது டுவிட்டரில் இதுகுறித்து விளக்கம் கூறியபோது, ‘தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.’’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ஆண்டாள் பற்றிய கட்டுரை வெளியிட்டதற்கு எதிராக வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை கவிஞர் வைரமுத்து தற்போது வாபஸ் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆண்டாள் பற்றி அவதூறாக பேசியதாக வைரமுத்துவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் பதிவான வழக்கிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தற்போது கவிஞர் வைரமுத்து வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!