சினிமா செய்திகள்

’இந்தியன் 2’ விவகாரம்: லைகாவின் இரு மனுக்களும் தள்ளுபடி!

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் இறந்ததையடுத்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின் கொரோனா வைரஸ் ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ’இந்தியன் 2’ படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான பணியை மேற்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த லைகா நிறுவனம் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்கக் கூடாது என்றும், ’இந்தியன் 2’ படத்திற்காக உத்தரவாத தொகை செலுத்த வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ’இந்தியன் 2’பட விவகாரம் படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இயக்குன ஷங்கர் இந்தியன் 2 படத்திற்கான உத்தரவாக தொகையை செலுத்த கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version