இந்தியா
ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
ராஜஸ்தானில் சனிக்கிழமை சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர் அடுத்தடுத்த வெடித்ததைத் தொடர்ந்து அருகிலிருந்த 3 குழந்தைகள் உள்பட 4 பேர் இறந்ததாகவும், 16 நபர்கள் மகாத்மா காந்தி மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா, இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து 6 சிலிண்டர்கள் அடுத்தடுத்த வெடித்ததாகவும், சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட பகுதி அருகிலிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்துள்ளன. இந்த வழக்கைப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் எப்படி விபத்து ஏற்பட்டது என தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.