தமிழ்நாடு

குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

Published

on

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதை அடுத்து மேலும் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குமரி கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் கனமழை காரணமாக 19 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கூடுதலாக மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஒருபக்கம் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை, இன்னொரு பக்கம் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து தமிழகமே கனமழையால் மூழ்கிஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் கனமழை காரணமாக தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மழை விடும் ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டும் தீபாவளி பர்ச்சேஸ் செய்ய கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மழை காரணமாக இந்த ஆண்டு பிளாட்பாரத்தில் கடை போட்டு வியாபாரம் செய்யும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வெகுவாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version