தமிழ்நாடு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: மிக கனமழைக்கு வாய்ப்பு!

Published

on

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும், அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் டெல்டா பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், நாளை முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் மிதமானது முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும்.

அதேபோல் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதிலும் சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறை காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version