தமிழ்நாடு

நவ.9ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published

on

நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் மிக வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியது என்றும் அதன் காரணமாக கனமழை பெய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நவம்பர் 9ஆம் தேதி உருவாக இருப்பதாகவும், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் 9ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் 9ஆம் தேதிக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு காரணமாக மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version