விளையாட்டு

தோல்வியால் துவண்டு இருந்த நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷிய வீரர் மகன்: நெகிழ்ச்சியான வீடியோ!

Published

on

உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் நேற்று நள்ளிரவு பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து குரோஷி அணி வீரரின் மகன் மைதானத்திற்கு வந்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஆறுதல் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நள்ளிரவு பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் மோதியது. இந்த போட்டியில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்பதால் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் போடவில்லை என்பதால் அடுத்ததாக பெனால்டி ஷூட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் குரோஷியா அணி நான்கு கோல்களை போட்ட நிலையில் பிரேசில் அணி இரண்டு கோல்களை மட்டுமே போட்டதால் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தனது அணியின் தோல்வி காரணமாக துவண்டு இருந்த நிலையில் அப்போது மைதானத்துக்கு வந்த குரோஷிய வீரர் விங்கர் இவான் பெரிசிச் என்பவரின் மகன் அவருக்கு ஆறுதல் கூறினார்.

தனது தந்தை உள்பட குரோஷிய வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களிடம் செல்லாத அந்த சிறுவன் நெய்மருக்கு ஆறுதல் கூறியது பெரும் நிகழ்ச்சியாக இருந்தது. இதுகுறித்த த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version