டிவி

’தாயான தாய் இவரோ…’- நெகிழ்ச்சி அடைய வைத்த ‘குக்கு வித் கோமளி’ ஷகிலாவின் செயல்!

Published

on

குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் புதிய புகழை அடைந்துள்ளார் நடிகை ஷகிலா.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தமிழகத்தின் அதிக ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது. இதில் பங்குபெறும் போட்டியாளர்கள், கோமாளிகள், நடுவர்கள், தொகுப்பாளர் என அனைவரும் புதிய புகழைப் பெற்று வருகின்றனர். வரும் சனிக்கிழமை வெளியாக உள்ள நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் நடந்தன குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் போட்டியாளர் ஷகிலாவின் தாய் அன்பு மிகுந்த செயல் நெட்டிசன்களை நெகிழ வைப்பதாக சமுக வலைதளங்களில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவருக்கும் அம்மா ஷகிலா தான். படப்பிடிப்புக்கு இடையே நடுவர் தாமு உடன் அமர்ந்து ஷகிலா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது படப்பிடிப்பில் ஏற்பட்ட களைப்பில் கோமாளியாக இருக்கும் மணிமேகலை ஷகிலாவின் மடியில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.

கார்ட்டூன் கதாபாத்திரம் ‘சோட்டா பீம்’ ஆக இருக்கும் மணிமேகலை ஷகிலா மடியில் அன்பாகக் குறட்டைவிட்டுக் கொண்டு படுத்துறங்க ஷகிலா ஆறுதலாய் தடவிக் கொடுக்கிறார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் தான் தற்போது நெட்டிசன்களை நெகிழ்ச்சி அடையச் செய்திருப்பதாகக் கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version