Connect with us

தமிழ்நாடு

மனைவியை ஜிம்முக்கு அனுப்பிய கணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published

on

மதுரையில், காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனை விட்டுப் பிரிந்து, ஜிம் மாஸ்டருடன் மனைவி சென்ற சம்பவம் அந்த குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ். மதுரை விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கனிமொழி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தார் சம்மதத்துடன் மூன்று ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இத்தனை நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த போது கனிமொழியின் கர்பப்பையில் நீர் கட்டிகள் உள்ளன. எனவே சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

எனவே தனது வீட்டில் அருகில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது யோகேஷ் கண்ணா என்ற ஜிம் பயிற்சியாளருடன் ஏற்பட்ட நெருக்கத்தில் காதல் வயப்பட்டுள்ளார்.

இவர்களது காதல் செல்போனிலும் தொடர, கணவர் ராஜேஷ் எச்சரித்துள்ளார். ஆனாலும் கணவனை மறந்து காதலன் பக்கமே இருந்துள்ளார் கனிமொழி. ரஜேஷ் மற்றும் யோகேஷ் கண்ணா இருவர் இடையிலும் இதன் காரணமாக அவ்வப்போது சண்டையும் ஏற்பட்டுள்ளது.

பிரிச்னை பெரியதாகக் கனிமொழி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் செல்ல முடிவெடுத்துள்ளார். இதை அறிந்த ராஜேஷ் மனைவிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கனிமொழி நடந்த சம்பவத்தை யோகேஷிடம் தெரிவித்துள்ளார்.

உடனே ஜிம் மாஸ்டர் யோகேஷ், கனிமொழி வீட்டுக்கு 4 பேருடன் வந்து கணவன் முன்பே, காதலியை அழைத்துச் சென்றுள்ளார். தடுக்க சென்ற ராஜேஷை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மனைவியை அழைத்துச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, மனைவியைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், பணம் அளிக்க வேண்டும் என்று ராஜேஷூக்கு போன் செய்துள்ளார் யோகேஷ். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குழந்தை வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், மனைவியை ஜிம்முக்கு அனுப்பியது ராஜேஷூக்கு இப்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!