இந்தியா

பெங்களூருவில் திடீரென கேட்ட ‘பூம்’ சத்தம் – மக்கள் அதிர்ச்சி!!!

Published

on

பெங்களூரு நகரத்தில் இன்று திடீரென்று ‘பூம்’ என்கிற அதி பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 12:30 மணிக்குப் பின்னர் இந்த சத்தம் கேட்டுள்ளதாக பெங்களூருவாசிகள் பலர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.

நகரின் சில பகுதிகளில் இந்தச் சத்தம் கேட்கவில்லை என்றாலும், பல இடங்களிலும் காதைப் பிளக்கும் அளவுக்கான ‘பூம்’ சத்தம் நன்றாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதைப் போன்ற ஒரு ‘பூம்’ சத்தம் சென்ற ஆண்டும் இதே காலக்கட்டத்தில் கேட்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம், தங்களின் ஜெட் விமானம் எதையாவது இப்படி இயக்கும் போது, ‘பூம்’ என்கிற சூப்பர் சோனிக் சத்தம் வரும் எனப்படுகிறது. ஆனால், தாங்கள் எந்த வித ஜெட் விமானத்தையும் இயக்கவில்லை என்று எச்.ஏ.எல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதனால், இந்த சத்தம் எதன் மூலம் வந்தது என்பது குறித்து தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

seithichurul

Trending

Exit mobile version