Connect with us

இந்தியா

2 வருடம் பாலியல் இன்பம் இல்லை.. அரசிடம் ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்கும் இளைஞர்!

Published

on

தவறான குற்றச்சாட்டு காரணமாக தன்னை சிறையில் இரண்டு வருடம் சிறையில் அடைத்ததால் தனக்கு பாலியல் இன்பம் கிடைக்கவில்லை என கூறி ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு இளைஞர் ஒருவர் அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கண்டிலால் பீல் என்ற 35 வயது நபர் ஒருவர் கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு போலியானது என்று நிரூபணமானதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தனது விடுதலையை தான் பெரிதாக நினைக்கவில்லை என்றும் தான் சிறையில் இருந்த இந்த இரண்டு ஆண்டுகளையே பெரிதாக கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக தனக்கு தொழிலில் ஏற்பட்ட இழப்பு, மரியாதைக்குறைவு, இழந்த சொந்தங்கள், உடல்ரீதியாக அனுபவித்த வேதனைகள் குறிப்பாக பாலியல் உறவில் ஈடுபட முடியாத நிலை ஆகியவற்றுகாக தனக்கு அரசு பத்தாயிரம் கோடி இழப்பீடு தரவேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

எனது குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருந்தேன் என்றும் இரண்டு வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டதால் எனது வயதான தாய், எனது மனைவி மற்றும் குழந்தைகள் கடும் வேதனைக்கு உள்ளாகினர் என்றும் அந்த வலியை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்றும் நான் சரியான உடைகள் கூட இல்லாமல் சிறையில் துன்பமான வாழ்க்கை வாழ்ந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போலீசார் வேண்டும் என்றே போலியான வழக்கை ஜோடித்து என்னை சிறையில் தள்ளியுள்ளனர் என்றும் என் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சிதைத்து விட்டனர் என்றும் கூறிய அவர் எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக பத்தாயிரம் கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஜனவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசித்திரமான வழக்கின் விசாரணை எப்படி இருக்கும்? இந்த வழக்கின் தீர்ப்பை தீர்ப்பு எப்படி இருக்கும்? என்பதை அறிய நாடே காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. போலியாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் இரண்டு வருடங்கள் வாழ்க்கையை தொலைத்து இருக்கும் நிலையில் அவரது இழப்புக்கு ஈடு செய்ய முடியாத தொகை கொடுக்க வேண்டியது அவசியம் என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்