தமிழ்நாடு
லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்: சமூக வலைத்தளங்களில் சிசிடிவி வீடியோ வைரல்
உடுமலைப்பேட்டை அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மோதியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த சிசிடிவி காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. எஸ்வி புரம் அருகே முன்னால் சென்ற லாரி ஒன்றை ஆம்புலன்ஸ் வேகமாக முந்திச் செல்ல முயன்ற அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் லாரி ஓட்டுநர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.