கிரிக்கெட்

நீண்ட இடைவெளிக்கு பின் 100% பார்வையாளர்களுடன் கிரிக்கெட் போட்டி: ரசிகர்கள் உற்சாகம்

Published

on

லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் 100% இருக்கைகளை நிரப்பிக்கொள்ள இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகின் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 31,500 பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பார்வையாளர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக லண்டன் லார்ட்ஸ் மைதான நிர்வாகிகள் தெரிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை அடுத்து இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version