இந்தியா

நிரவ் மோடியை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு..!

Published

on

கடன் மோசடி வழக்கில் இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டனில் வசித்து வரும் நிரவ் மோடியை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிரவ் மோடி இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டன் சென்று வசித்து வருகிறார். இந்திய அமலாக்கத்துறையினர், சிபிஐ சார்பில் கடந்த சில ஆண்டுகளாகவே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தச் சொல்லி வழக்குத் தொடர்ந்து வருகிறது இந்தியா.

இந்நிலையில் இந்தியா அளித்துள்ள சான்றுகளும் வேண்டுகோளும் ஏற்புடையதாக இருப்பதால் நிரவ் மோடி நாடு கடத்தப்படலாம் என லண்டன் நீதிமன்ற நீதிபதி சாமுவேல் கூஸ் அறிவித்துள்ளார். நாடு கடத்த அனுமதி கிடைத்த போதும் ஆவணப் பணிகளை எல்லாம் நிறைவு செய்து நிரவ் மோடி இந்தியா வர இன்னும் மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

காரணம், இதே போல் தான் விஜய் மல்லையாவுக்கும் நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடைமுறைகள் இன்னும் முடியவில்லை.

Trending

Exit mobile version