இந்தியா

மக்களவையில் ஹிஜாப் பிரச்சனையை எழுப்பிய திமுக எம்பிக்கள்: பெரும் பரபரப்பு!

Published

on

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை கடந்த சில நாட்களாக கொளுந்துவிட்டு எரியும் நிலையில் இந்த பிரச்சனையை மக்களவையில் திமுக உள்பட ஒரு சில கட்சிகளின் எம்பிக்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் திடீரென ஹிஜாப் பிரச்சனையை திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எழுப்பினர். கர்நாடக மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் பாராளுமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த திமுக உள்பட எதிர்கட்சி எம்பிகள் அதன் பின்னர் மக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஹிஜாப் மற்று, காவி பிரச்சனை தற்போது நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் மக்களவையிலும் இந்த பிரச்சனையை எம்பிக்கள் எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version