இந்தியா

மர்மமான முறையில் சடலமாகக் கிடந்த மக்களவை எம்.பி..!- தற்கொலை செய்து கொண்டாரா?

Published

on

மக்களவை எம்.பி மோகன் என்பவர் மர்மமான முறையில் ஹோட்டல் அறை ஒன்றில் சடலமாகக் கிடந்தது பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி மக்களவை எம்.பி ஆக மோகன் தெல்கர் இருந்தார். இவர் ஒரு சுயேச்சை எம்.பி ஆவார். மும்பையில் உள்ள மரைன் ட்ரைவ் ஹோட்டலில் இவர் சடலமாக இருந்துள்ளார். காவல் துறையினர் இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 9 முறையாக தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி தொகுதி எம்.பி ஆகப் பதவி வகித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு வரையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் அதன் பின்னர் சுயேச்சையாகிவிட்டார். ஒரே தொகுதியில் 9 முறை வெற்றிப் பெற்று வந்த எம்.பி ஒருவர் திடீரென மும்பையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்துள்ளார்.

போலீஸார் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

seithichurul

Trending

Exit mobile version