தமிழ்நாடு

லோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் ஏப்ரலுக்கு முன்பே தேர்தல்.. திட்டமிடும் தமிழக அரசு!

Published

on

சென்னை: லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

லோக்சபா தேர்தல் இந்த வருடம் மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரத்தில் சூடு கூடிக்கொண்டே செல்கிறது.

லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் முழுதாக 4 மாதங்கள் இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் முன்கூட்டியே நடக்க உள்ளதாகவும், இதற்கான பணிகளை அரசு செய்து வருவதாகவும் தகவல்கள் வருகிறது.

இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இரண்டாம் கட்டமாக மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும். பின் மே இறுதியில் தேர்தல் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்திற்கு லோக்சபா தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் கூற உள்ளதாக தெரிகிறது. இதை தொடர்பாக தமிழக அரசு தேர்தல் ஆணையத்துடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது.

Trending

Exit mobile version