தமிழ்நாடு

தம்பிதுரைக்கு திடீர் நெஞ்சுவலி: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை!

Published

on

அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக மூத்த தலைவரான மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள தம்பிதுரையை நேற்று இரவு 7 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோ மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version