தமிழ்நாடு

#Breaking | ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு: அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி.

Published

on

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 5ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி என்றும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி என்றும், பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும், அதேபோல் நீச்சல்குளங்கள், திரையரங்குகள் மற்றும் மதுபானகூடத்திற்கு தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மேலும் கூறியிருப்பதாவது:

author avatar
seithichurul

Trending

Exit mobile version