உலகம்
ஜெர்மனியில் ஊரடங்கு நீட்டிப்பு: அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு
ஜெர்மனியில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அங்கு மேலும் நீட்டிப்பு என அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்புச் செய்துள்ளார்.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் இரண்டாவது அலை ஏற்பட்டுவிட்டதாகவும் இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து ஒரு சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தற்போது ஏப்ரல் 18ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்புச் செய்துள்ளார்.
மேலும் இடையில் ஈஸ்டர் விடுமுறையான 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் ஈஸ்டர் விடுமுறையின் போது மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்தே ஈஸ்டர் விடுமுறையின் போது தீவிர ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியை அடுத்து மேலும் சில நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.