தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பதும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிகபட்ச தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதும் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கையை திரும்பி விட்டது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பெயரளவிற்கு ஊரடங்கு உத்தரவு அரசாங்கத்தால் ஒவ்வொரு மாதமும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவு என்பதால் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version