இந்தியா

அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் 2 வாரங்கள் ஊரடங்கு..

Published

on

கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் பலரும். உயிர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் அதிகம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் முதன் முதலாக கொரோனா தொற்று கேரளாவில்தான் கண்டறியப்பட்டது. இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளிலில் இருந்து விமானம் மூலம் கேரள திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலம் மூலமாகவே இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் கொரோனா பரவியது.

இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில்தான் அதிக கொரொனா பாதிப்பு காணப்படுகிறது. தற்போதும் சராசரியாக 30 ஆயிரம் பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு மீண்டும் 2 வாரங்கள் ஊரடங்கை அமுல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version