தமிழ்நாடு

நாளை ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் ஏற்கனவே நான்கு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் நாளை ஐந்தாவது நாளாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கலியுக வரதன் பெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதனை அடுத்து நாளை அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விடுமுறையை சரிக்கட்டும் விதத்தில் வேறொரு நாளில் வேலைநாள் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் நாளை ஐந்தாவது நாளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Trending

Exit mobile version