தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பல்லி: அதிர்ச்சியில் பயனாளிகள்!

Published

on

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் இந்த பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு 21 பொருள்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் அதனை அடுத்து தமிழகம் முழுவதும் தற்போது ரேஷன் கடைகளில் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட முறையில் இறந்த பல்லி இருந்ததை பார்த்து பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version