தமிழ்நாடு

5 நாட்கள் மதுபானக்கடை மூடப்படும்: ஆளுனர் அறிவிப்பு!

Published

on

தேர்தலை முன்னிட்டு ஐந்து நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும், அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கையின் நாளான மே 2-ஆம் தேதி மற்றும் மே 3ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும், மொத்தம் ஐந்து நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

இதே போல் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடப்படும் என்றும், இது குறித்த அறிவிப்பை விரைவில் தமிழக அரசு வெளியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version