தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை!

Published

on

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில், 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 14, தீபாவளி நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தீபாவளியன்று 237 கோடி ரூபாய்க்கும், அதற்கு முந்தைய நாளான நவம்பர் 13-ம் தேதி, 227 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

அதிகபட்சமாக மதுரையில் மட்டும் இரண்டு நாட்களில், 103.82 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. தொடர்ந்து திருச்சியில் 75 கோடி ரூபாய்க்கும், சென்னையில் 94 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 84 கோடி ரூபாய்க்கும், சேலம் மாவட்டத்தில் 87.58 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

நடந்து முடிந்த தீபாவளிக்கு 400 கோடி ரூபாய் அளவில் மது விற்பனை செய்யப்படும் என்று இலக்கு வைக்கப்பட்டது. இலக்கை விட அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன,

Trending

Exit mobile version