சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சமுத்திரக்கனி!

Published

on

விஜய் சேதுபதி அண்மையில் தமிழர்களுக்கு எதிரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

பின்னர் அதிலிருந்து விஜய் சேதுபதி வெளியேறிய நிலையில், அதே போன்ற ஒரு சர்ச்சையில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி சிக்குவார் போல.

சில ஆண்டுகளுக்குத் தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு, கூலித் தொழிலாளிகளாகச் சென்று செம்மரக் கடத்தல் செய்தார்கள் என்று 20 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் முக்கிய பங்கு வகித்த போலீஸ் கதாபத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. 800 பட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று விலகினார்.

பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பாபி சிம்மா, மாதவன் உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர்களும் நடிக்கவில்லை. இந்நிலையில் சமுத்திரக்கனி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் கூறுகின்றன.

ஒருவேலை அந்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் தமிழர் சமுத்திரக்கனி நடித்தால், மீண்டும் ஒரு சர்ச்சை தமிழகத்தில் வெடிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சமுத்திரக்கனி படத்தில் இருண்டு விலகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version