இந்தியா

வெள்ளி வென்ற மீராபாய்க்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா: பிரபல நிறுவனம் அறிவிப்பு!

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் நூற்றுக்கும் மேலான இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் மீராபாய் சானு என்பவர் மட்டுமே இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பரிசுகளும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மீராபாய் சொந்த மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் அவரை வீடியோ காலில் பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றும் அவர் நாடு திரும்பியதும் அவருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்கப்படும் என பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இத்தாலி நாட்டிலுள்ள டாமினோஸ் பீட்சா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டநாள் ஆசை காரணமாக முதலில் பீட்சா ஒன்றை சாப்பிட வேண்டும் என்று வெள்ளி பதக்கத்தை வென்ற உடன் அவர் பேட்டி பேட்டி அளித்ததை அடுத்து டாமினோஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இத்தாலி நாட்டின் டாமினோஸ் நிறுவனம் மீராபாய்க்கு அவரது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீடா வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version