தமிழ்நாடு
மனைவி சண்டையிட்ட விரக்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்!
![Edappadi Palanisamy 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Edappadi-Palanisamy-1.jpg)
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவற்றை விசாரித்தால் அவை புரளி மிரட்டல்களாக உள்ளன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை செய்த காவல் துறையினர் முதல்வருக்கு மிரட்டல் விடுத்த நபரை கண்டு பிடித்தனர். மிரட்டல் விடுத்த சேலையூரைச் சேர்ந்த வினோத் குமாரை கைது செய்தனர்.
காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மனைவி சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற விரக்தியில் இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.