தமிழ்நாடு
அன்புமணி அந்தர் பல்டி..குட்கா ஊழல் புகாரை முதலில் விசாரிக்கட்டும்.. ஆதாரம் இருந்த பார்க்கலாம்!
சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் பாமக அதில் சரியான நிலைப்பாடு எடுக்கும் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக பாமக கூட்டணி லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணி உறுதியாவதற்கு முன் பாமக அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தது.
முக்கியமாக குட்கா ஊழல் புகார் தொடர்பாக புகார்களை பாமக அடுக்கியது. இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு பின் முதல்முறை பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குட்கா ஊழல் குறித்து பேசியுள்ளார்.
அன்புமணி தந்து பேட்டியில், சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம். பென்னாகரம் தேர்தலின் போதே நாங்கள் இந்த முடிவை எடுத்துவிட்டோம். அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் அதனால்தான் ஆதரவு அளிக்கிறோம்.