வைரல் செய்திகள்

சிறுத்தையுடன் சண்டையிட்டு உயிர்பிழைத்த பெண்!

Published

on

மேற்கு வங்காளத்தில பெண் ஒருவர் சிறுத்தையிடம் சிக்கி, சண்டையிட்டு உயிர்பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் லீலா ஓரான். இவர் அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த சிறுத்தை, லீலாவை நோக்கி பாய்ந்து வந்தது. இதனை சற்றும் எதிர்பாராத லீலா, சிறுத்தையின் பிடியில் சிக்கினார். சிறுத்தையை எதிர்கொள்ள கையில் எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும், துணிந்து சண்டையிட தொடங்கினார். ஒரு கட்டத்தில் சிறுத்தையே பிடிகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது.

இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மற்ற தொழிலாளர்கள், காயத்துடன் கிடந்த லீலாவை மீட்டு மருத்துமனையில் அனுப்பி வைத்தனர். அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுத்தையிடம் சிக்கிய பெண், சண்டையிட்டு உயிர்பிழைத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

Trending

Exit mobile version