இந்தியா
தடுப்பூசி போட்டு கொண்டால் டிவி இலவசம்: அதிரடி அறிவிப்பு!
தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் டிவி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஆட்டுவித்து வருகிறது என்பதும், குறிப்பாக இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும், தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதன் காரணமாக இந்தியாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரனோ வைரஸ் தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு இலவசமாக எல்.இ.டி டிவி தரப்படும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூர் என்ற மாநகராட்சியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.