வணிகம்
நவம்பர் 27 முதல் டிபிஎஸ் வங்கியாக மாறும் லஷ்மி விலாஸ் வங்கி.. கட்டுப்பாடுகள் நீக்கம்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
நவம்பர் 27-ம் தேதி முதல் லஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
லஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுவதால், நவம்பர் 27-ம் தேதி பணம் எடுக்க இருந்து 25 ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது.
லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க நேற்று மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டு வங்கிகளையும் நவம்பர் 27-ம்தேதி முதல் இணைந்து செயல்பட ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய வங்கிகள் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டு வங்கியுடன், இந்திய வங்கி இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே லஷ்மி விலாஸ் வங்கி விற்பது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. அப்பொதி வங்கியின் நிதி நிலைமை நன்றாகவும் இருந்தது. ஆனால் அப்போது விற்க ஆர்பிஐ அனுமதி வழங்கவில்லை.
இப்போது வங்கியைத் திவால் ஆகும் நிலைக்குத் தள்ளி, நிதி பற்றாக்குறையில் உள்ள வங்கியை அடிமாட்டு விலைக்கு டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் லஷ்மி விலாஸ் வங்கியில் மூலதனத்தை அதிகரிப்பதற்கான பணிகளிலும் ஆர்பிஐ ஈடுபட்டு வருகிறது.
எது எப்படியோ, தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை இனி எந்த கட்டுப்பாடுகள் இன்றியும் எடுக்கலாம் என்பதில் லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.