தமிழ்நாடு
வாடகை பாக்கி எதுவும் கிடையாது- குற்றச்சாட்டுக்கு லதா ரஜினிகாந்த் விளக்கம்
ஆஷ்ரம் பள்ளிக்கான வாடகைத் தொகை நிலுவையில் உள்ளதாக வைக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளார் லதா ரஜினிகாந்த்.
லதா ரஜினிகாந்த் தனது ஆஷ்ரம் பள்ளிக் கட்டடத்துக்கான வாடகைத் தொகையில் பாக்கி வைத்துள்ளதாகவும் அதனால் வளாகத்தை காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் முன்பு வெளியாகி இருந்தன.
இதற்கு விளக்கம் வெளியிட்டுள்ள லதா ரஜினிகாந்த், “எங்கள் ஆஷ்ரம் பள்ளியின் சார்பில் வாடகை பாக்கி இருப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை. எங்கள் பள்ளியை வேறு வளாகத்துக்கு மாற்ற கொரோனா ஊரடங்கின் போது வாய்ப்பில்லாத சூழல் இருந்தது. இதனால் ஏப்ரல் வரை அவகாசம் தர வேண்டும் என்று நாங்கள்தான் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தோம். அதற்குத்தான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.