இந்தியா
சச்சினை அடுத்து ரிஹானாவுக்கு லதா மங்கேஷ்கர் பதிலடி!
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து உள்நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் பேச ஆரம்பித்துவிட்டனர். நேற்று காலை பிரபல பாப் பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான ரிஹானா தனது டுவிட்டரில் விவசாயிகள் பிரச்சினை குறித்து நாம் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறோம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்
அவரது இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த டுவிட்டிற்கு பலர் ஆதரவு தந்தாலும் ஒரு சில பிரபலங்கள் அவருடைய டுவிட்டுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்
ரிஹானாவை முட்டாள் என தனது டுவிட்டரில் குறிப்பிட்டு கங்கனா ரனாவத் பதிவு செய்து இந்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் சச்சின் டெண்டுல்கரும் ரிஹானாவிற்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பதை பார்த்தோம்
#IndiaTogether #IndiaAgainstPropaganda pic.twitter.com/JpUKyoB4vn
— Lata Mangeshkar (@mangeshkarlata) February 3, 2021
அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். உள்நாட்டு பிரச்சனைகளுக்கு வெளிநாட்டவர்கள் தலையிடக்கூடாது என்றும் இந்தியா தனது உள்நாட்டு பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளும் என்றும் விவசாயிகள் பற்றிய ரிஹானாவின் கருத்திற்கு லதா மங்கேஷ்கர் பதிலடி கொடுத்துள்ளார். லதா மங்கேஷ்கரின் இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது