டிவி

மறைந்த விஜே சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத்-க்கு ஜாமின்..!

Published

on

மறைந்த நடிகை விஜே சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத்-க்கு ஜாமின் கிடைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 9-ம் தேதி நள்ளிரவில் ஹோட்டல் அறையில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான முக்கியக் காரணமே அவரது கணவர் தான் என்ற கோணத்தில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வந்தது. ஹேம்நாத் கொடுத்த மன ரீதியிலான துன்புறுத்தல் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹேம்நாத் தந்தை, வெளியிட்ட சித்ரா தொடர்பான சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை வளையத்திற்கு பலர் வரவழைக்கப்பட்டனர். அதன்படி சித்ரா மற்றும் ஹேம்நாத் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், சித்ராவுடன் பணியாற்றியவர்கள் என பலர் விசாரணை செய்யப்பட்டனர். இதில்  இடையே சில முறை சித்ரா மரணத்துக்குத் தான் காரணமில்லை என சித்ராவின் கணவர் ஹேமந்த் பல முறை ஜாமின் கோரி வந்தார்.

ஆனால், தொடர்ந்து அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஹேம்நாத்-க்கு ஜாமின் கிடைத்துள்ளது. ஹேம்நாத் கைதாகி 60 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரையில் அவர் மீதான குற்றப்பதிவை தாக்கல் செய்யாததால் ஹேம்நாத்-க்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version