கிரிக்கெட்
ஒரே நேரத்தில் இரண்டு ஐபிஎல் போட்டிகள்: 4 அணிகளுக்கு சிக்கல்!
ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் கடைசி இரண்டு லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மாலை 03.30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியும், இரவு 07.30 மணிக்கு பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் இடையிலான போட்டியும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போதைய ஐபிஎல் போட்டியில் எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்லி தவிர மீதமுள்ள 6 அணிகளில் எந்த இரண்டு அணிகளும் அடுத்தச் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டி முடிந்த பின்னர் அடுத்த சுற்றுக்கு செல்வது எப்படி என்பதை ரன் ரேட்டை அடுத்த போட்டியில் விளையாடும் அணிகள் கணக்கிடும் என்பதால் அந்த கணக்கீடுகளை தவிர்ப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளையும் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது தற்போது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த புதிய திட்டத்தின் திட்டத்தின் இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியுமா என்பதை யூகிக்க முடியாது என்பதும் இரண்டு போட்டிகளும் முடிந்த பின்னர் தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி எது என்பது தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.