Connect with us

தமிழ்நாடு

உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ்: போலி உயில் தயாரித்து சொத்துக்கள் மோசடி!

Published

on

புதுச்சேரியை அடுத்த காரைக்கால் என்ற பகுதியில் உயிரோடு இருப்பவருக்கும் இறப்பு சான்றிதழ் தயார் செய்து, போலி உயில் ஒன்றும் தயார் செய்து கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் ஆனந்த் என்பவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவரது பெயரில் காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள், விளைநிலங்கள் உள்ளன.

இந்த நிலையில் குமார் ஆனந்த் பெற்றோரை இழந்துவிட்ட நிலையில் சொத்துக்களை பகுதி பகுதியாக பிரித்து தனது உறவினர்களிடம் ஒப்படைத்து அதனை நிர்வகித்து கொள்ள அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் குமார் ஆனந்தின் தாய் மாமனான தேவராஜன் என்பவர் தன் வசம் பராமரிப்பில் உள்ள சொத்துக்களை அபகரிக்க எண்ணி, கடந்த 2008ஆம் ஆண்டு குமார் ஆனந்த் இறந்து விட்டது போல போலியான இறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளார். மேலும் கடந்த 1996ஆம் ஆண்டு குமார் ஆனந்த் தனது பெயரில் உள்ள சொத்துக்களை தேவராஜ் பெயருக்கு மாற்றியதாகவும் போலி உயில் தயாரித்துள்ளார்.

இந்த உயில் மற்றும் இறப்பு சான்றிதழை வைத்து குமார் ஆனந்த் சொத்துக்களை பாஸ்கரன் மற்றும் இளங்கோவன் ஆகியோர்களுக்கு விற்கவும் அவர் திட்டமிட்டார். அதன்படி திருநள்ளாறு சார்பதிவாளர் முருகானந்தம் என்பவரை அணுகியபோது ஆவணங்கள் மீது சந்தேகம் கொண்டு பத்திரப்பதிவு செய்ய அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து முருகானந்தம் விடுமுறையில் சென்ற நாளாக பார்த்து வேறொரு சார்பு ஆய்வாளர் உதவியுடன் கடந்த மாதம் பத்திரப் பதிவு செய்துள்ளார்.

இந்த தகவல் குமார் ஆனந்த் உறவினர்கள் மத்தியில் மெல்ல கசியத் தொடங்கி உள்ளது. அவர்கள் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாரளிக்க போலி உயில் மற்றும் போலி இறப்புச் சான்றிதழ் விவகாரம் வெளியே தெரியவந்தது. இதனை எடுத்து தேவராஜ் மீதும் சொத்துக்களை வாங்கிய பாஸ்கர், இளங்கோவன் எழுதிய ஆவண எழுத்தர் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு சொத்துக்களை விற்க பத்திரபதிவு சார் பதிவாளர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!