சினிமா

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு தொடர் மிரட்டல்: பின்னணியில் முக்கிய புள்ளி!

Published

on

பிரபல நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போலியான அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் ஏற்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகிறார்கள். இதற்குப் பின்னணியில் ஒரு முக்கிய புள்ளி இருந்து வருகிறார். இதை எதிர்த்து குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து கேள்வி கேட்டதற்குத் தொடர்ச்சியாக போன் வழியாகவும், நேரடியாகவும் மிரட்டி மன ரீதியான பிரச்சினைகளைக் கொடுத்து வருகின்றனர்.

என்னை அசிங்கப்படுத்துவதற்காக என் தனிபட்ட வாழ்க்கை பற்றியும், என் நடிப்பு தொழில் பற்றியும் கேவலமாக பொதுவெளியில் பேசியும், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணை ஆணையரைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளேன் என்றார்.

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சென்னை ஐயப்பன்தாங்கலில் 1300-கும் அதிகமான குடியிருப்புகள் உள்ள பிரெஸ்டீஜ் வில்லா விஸ்தா அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்.

Trending

Exit mobile version