செய்திகள்
மாரியாத்தாளுக்கே தடுப்பூசியா? – ஊசி போட மறுத்து சாமி ஆடிய மூதாட்டி (வைரல் வீடியோ)..
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். கணிசமானவர்கள் இறந்துவிட்டனர். இன்னும் கொரோனோ தொற்றின் வீரியம் முழுதாக குறையவில்லை.
எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியை உலக சுகாதார மையம் வலியுறுத்தியது. அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு செலுத்தியது. இந்தியாவிலும் பல லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். ஆனால், தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறி கணிசமான பேர் தடுப்பூசி போட தயங்கி வருகின்றனர். எனவே, அவர்களை வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட வைக்கும் பணியை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி போட வந்த நகராட்சி ஊழியர்களிடம் ஒரு மூதாட்டி தடுப்பூசி போட மறுத்தார். உங்களுக்கு எதுவும் ஆகாது என ஊழியர் கூறவே, ஒரு கட்டத்தில் திடீரென ‘நான் சாமி.. மாரியம்மா..அங்காளம்மா.. எனக்கே தடுப்பூசியா?’ என அவர் சாமியாட துவங்கினார்.
எங்கே தனக்கு ஊசி போட்டு சாகடித்து விடுவார்களோ என்கிற பயத்தில் அவர் சாமி நாடகத்தை கையில் எடுத்தார். எனவே, அந்த நகராட்சி ஊழியர்கள் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாருகிட்ட வந்து
என்ன பேச்சு பேசுறவ?
மாரியாத்தாளுக்கே
தடுப்பூசியா?தடுப்பூசி போட மறுத்து
சாமியாடும் பாட்டிம்மா. pic.twitter.com/PRRuHvPsGo— surya xavier (@suryaxavier1) December 2, 2021