தமிழ்நாடு
நீட் தேர்வு அச்சம் காரணமாக பெண் மருத்துவர் தற்கொலை: திருமணமான 6 மாதத்தில் நடந்த பரிதாபம்!
திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராசி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இந்த் நிலையில் தனது பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த திடீரென வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்தபோது பிஜி நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த ராசி, மன உளைச்சலுடன் இருந்ததாகவும் நீட்தேர்வு அச்சம் காரணமாகத்தான் ராசி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும் திருமணமான 6 மாதத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராசியின் மரணத்திற்கு உண்மையிலேயே நீட்தேர்வு அச்சம் தான் காரணமா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்ற ரீதியில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.