தமிழ்நாடு

நள்ளிரவில் சினிமா பார்த்து திரும்பிய பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்: 17 வயது சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

Published

on

நள்ளிரவில் பெண் மருத்துவர் ஒருவர் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் காட்பாடி சாலையில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் ஆண் நண்பரை கட்டிப்போட்டுவிட்டு பெண் மருத்துவரை கூட்டு பலாத்காரம் செய்தது.

மேலும் அவர்களது செல்போன்கள் ஏடிஎம் ஆடையையும் பறித்துக்கொண்டு ஏடிஎம் அட்டையின் மூலம் 40,000 பணத்தையும் எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண் மருத்துவர் எந்தவிதமான புகாரும் போலீசில் அளிக்கவில்லை.

இருப்பினும் நான்கு பேர் டிப்டாப் உடை அணிந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டு வந்ததை அறிந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தபோது பெண் மருத்துவரை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு அவர்களிடம் இருந்து பறித்து ஏடிஎம் அட்டையில் மூலம் கிடைத்த பணத்தில் தான் செலவு செய்ததாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருவர் 17 வயது சிறுவர்கள் என்பதும் மற்றவர்கள் 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் என்பதும் தெரிய வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version