இந்தியா
’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்!
இதுதான் எனது கடைசி குட்மார்னிங் என பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்த பெண் டாக்டர் ஒருவரின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த மனிஷா யாதவ் என்ற பெண் டாக்டர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமான மோசமாக நடந்ததை அடுத்து அவர் தனது ஃபேஸ்புக்கில் இதுதான் என்னுடைய கடைசி குட்மார்னிங் ஆக இருக்கும் எனக்கே தெரிகிறது, என்னுடைய மரணம் அருகில் வந்துவிட்டது என்று இருப்பினும் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். என்னுடைய உடலுக்குத் தான் அழிவே தவிர ஆத்மாவுக்கு அழிவில்லை, ஆத்மா என்றும் அழிவில்லாதது என்று பதிவு செய்துள்ளார்.
டாக்டர் மனிஷா ஜாதவ்வின் இந்த பேஸ்புக் பதிவு செய்த 36 மணி நேரத்தில் அவர் மரணமடைந்து விட்டார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக அவரது மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் தனது மரணத்தை முன்கூட்டியே கணித்து பேஸ்புக்கில் பதிவு செய்து அவரது பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.