சினிமா செய்திகள்
பாதி படத்திலேயே ஸ்ருதிஹாசனை ஓரங்கட்டிய ‘லாபம்’ இயக்குநர்..!- ஸ்ருதிதான் காரணமாம்
லாபம் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசனை பாதி படத்துக்கு மேல் படப்பிடிப்புக்கே கூப்பிடவில்லை என்பதை அந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி- ஸ்ருதிஹாசன் நடிப்பில் கொரோனாவுக்கு முன்னாடியே தொடங்கிய படம் லாபம். இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை. இந்த சூழலில் கொரோனாவுக்குப் பின்னான படப்பிடிப்புக்கு ஸ்ருதிஹாசன் இல்லாமலேயே படத்தை எடுத்து முடிக்க உள்ளாராம் இயக்குநர்.
இதுகுறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், “கொரோனா கட்டுப்பாடுகள் உடன் லாபம் படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது விஜய் சேதுபதியைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டார்கள். மற்றொரு நடிகரான ஜெகபதி பாபு விஜய் சேதுபதி உடன் சேர்ந்து ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இவர்களைப் பேசுவதைப் பார்த்து ஸ்ருதிஹாசன் என்னிடம் கூட சொல்லாமல் படப்பிடிப்பில் இருந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர் இருக்க வேண்டிய சீன்களை ஸ்ருதி இல்லாமலேயே எடுத்து வருகிறோம். டப்பிங் செய்யவாவது வருவாரா எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.