சினிமா செய்திகள்
கே.வி. ஆனந்த் மனைவி, மகளுக்கும் கொரோனா: சிகிச்சை பெற்று வருவதாக தகவல்!
இயக்குனர் கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கேவி ஆனந்த் அவர்களுக்கு கொரோனா இருந்ததால்தான் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது காலமானார் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கேவி ஆனந்த் மனைவி மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே தங்களை தாங்களே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில்தான் கேவி ஆனந்த் அவர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்தான் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கேவி ஆனந்த் அவர்களின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் செய்தி தற்போது வெளிவந்து திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.