சினிமா செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தாரா கே.வி.ஆனந்த்? அதிர்ச்சி தகவல்!

Published

on

பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதே ஆன கேவி ஆனந்த் அவர்களின் மறைவு திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு என்று கூறப்பட்டு வந்தது.

கேவி ஆனந்த் அவர்கள் விஜய் சேதுபதிக்காக ஒரு திரைக்கதையை தயார் செய்து வைத்திருந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் மறைந்து உள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற முதலில் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்ததால் அவரது உடல் நேராக பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தற்போது அவருடைய உடல் இறுதிச்சடங்கு குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. ஏற்கனவே கொரோனாவால் சமீபத்தில் இயக்குனர் தாமிரா உயிரிழந்த நிலையில் தற்போது இயக்குநர் கேவி ஆனந்த்தும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version