தமிழ்நாடு
ஹேக் செய்யப்பட்ட பின் மீண்டும் ட்விட்டருக்கு வந்த குஷ்பு- முதல் ட்வீட்டிலேயே அதிரடி
நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு சில நாட்களுக்கு முன்னால் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு உள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட போது அவரின் பழைய ட்வீட்டுகள் மொத்தமும் நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. மேலும் அவரின் பெயரை ‘Briann’ என மாற்றி ஹேக் செய்தவர்கள் கேலி செய்தனர்.
What can be a better way to come back to Twitter world? Congratulations to #MirabaiChanu for creating history at #TokyoOlympics2021 Winning #Silver is no mean feat. India salutes you! #womenpower ????????????????????????????????????
— KhushbuSundar (@khushsundar) July 24, 2021
ஓரிரு நாட்கள் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்தது. தற்போது தன் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தும், ‘பெண்கள் சக்தி’ என்று குறிப்பிட்டும் உற்சாக ட்வீட் செய்துள்ளார்.
My gratitude to #DGP #ShylanderBabu ji and his team for their swift action and helping me to retrieve my Twitter account, safe and sound. ????????????????
— KhushbuSundar (@khushsundar) July 24, 2021
இந்த வெற்றியின் மூலம் மீராபாய் சானு வரலாறு படைத்து உள்ளதாக குஷ்பு குறிப்பிட்டு உள்ளார்.