தமிழ்நாடு
‘இப்பல்லாம் இப்டிதாங்க..!’- கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுந்தர்.சி-ஐ பார்த்து ஏங்கும் குஷ்பு
நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குநருமான சுந்தர்.சி சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது கொரோனாவிலிருந்து விடுபட அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இது குறித்து குஷ்பு கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி, ‘என் கணவர் சுந்தர் சி கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நன்னாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என்றார்.
This is how we see each other nowadays.. 3 more days to go before he can come home. ❤❤ #maskitup #maintaindistance #fightcorona #GetVaccinated pic.twitter.com/mnGfCt8klV
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 16, 2021
தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி, ‘நண்பர்களே உங்களது அனைவரது பிரார்த்தனைக்கு பதில் கிடைத்துள்ளது. என் கணவர் சுந்தர்.சி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். அவர் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வார். அவர் எங்களது கெஸ்ட் ஹவுஸில் தங்க இருக்கிறார். இதனால் அடுத்த 7 நாட்களுக்கு அவரை என்னால் பார்க்க முடியாது. உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது கணவர் இருக்கும் கெஸ்ட் ஹவுஸுக்குச் சென்று அவரிடமிருந்து தள்ளி அமர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குஷ்பு. போட்டோவுடன், ‘இப்போதெல்லாம் நாங்கள் இப்படித் தான் பார்க்கிறோம். அவர் மீண்டு வர இன்னும் 3 நாட்கள் இருக்கின்றன’ என்று சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.