சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியையே வாடா என கூப்பிட்டாரா குஷ்பு?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினியை தான் வாடா என கூப்பிட்டு உள்ளதாக குஷ்பு ஒரு பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலில் குஷ்பு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பிரபு ஜோடியாக நடித்து இருந்தார். அப்போது அவருக்கு தமிழில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தெரியும்

இந்த நிலையில் படக்குழுவினர்கள் சிலர் ஒருவருக்கொருவர் வாடா போடா என்று கூப்பிட்டு கொண்டதை அடுத்து அவர் வாடா என்பது நல்ல சொல் என நினைத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வாடா என்று கூப்பிட்டதாகவும், அதன் பின்பு பிரபு அதற்கு அர்த்தம் கூறியபின் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

இந்த நிலையில் குஷ்பூ சுந்தர் சி திருமணம் செய்து 22 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று தனது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். சுந்தர் சி இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பின் இடையே குஷ்பூ சுந்தர் சி திருமண நாள் விழா கொண்டாடப்பட்டது என்பதும் படக்குழுவினர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version