சினிமா செய்திகள்
நடிகையாகும் மகளுக்கு உதவி செய்ய மாட்டோம்: குஷ்பு
குஷ்புவின் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க வரும் நிலையில் அவருக்கு பரிந்துரை செய்யவோ, உதவி செய்யவோ மாட்டோம் என குஷ்பு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி தம்பதிக்கு அவந்திகா அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் லண்டனில் நடிப்பு பயிற்சி முடித்துள்ளார். இதனையடுத்து அவர் இந்தியா திரும்பி திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது நடிகை குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது எனது மகள் லண்டனில் உள்ள மதிப்புமிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் படிப்பை முடித்து விட்டார். இனி அவரேதான் வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். அவரது நடிப்புக்காக நாங்கள் யாரிடமும் பரிந்துரை செய்ய மாட்டோம், உதவியும் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார்.
திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை நட்சத்திரம் ஆக்குவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து சொந்தப்படம் எடுத்து வரும் நிலையில் தனது மகளுக்கு தான் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்றும் தனது மகள் தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னுக்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.